• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் அரைநிர்வாண போராட்டம்

August 25, 2018 தண்டோரா குழு

கோவையில் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் கோவை , கமுதகுடி , காளையார் கோவில் ஆகிய இடங்களில் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலைகளில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 30 சதவித ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 20 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் 6 வது நாளாக தொடர்ந்து வருகின்றது.வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் நிலையில் கோவை சி.எஸ்.டயிள்யூ ஆலை முன்பாக தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய பஞ்சாலை கழக ஆலை நிர்வாகம் உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலை கழக ஆலைகளில் பணிகள் முடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க