August 21, 2018
தண்டோரா குழு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.இதற்கிடையில்,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்கையை மையமாக உருவான எம்.எஸ்.தோனி படத்தில் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளித்துள்ளார்.