• Download mobile app
02 Sep 2026, WednesdayEdition - 3857
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த முதல்வரைத் தூக்கிச்சென்ற காவலர்களால் பரபரப்பு

August 22, 2016 தண்டோரா குழு

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கங்கை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் மத்திய பிரதேசமும் ஒன்று.அங்குப் பலவேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதோடு, பல மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்தச் சேதங்களை பார்வையிட வந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தூக்கி வருவது போல் ஒரு போட்டோவும், அவர் சேற்றில் நடக்கும்போது,ஒரு அதிகாரி அவரது காலணியைத் தூக்கிவருவது போலவும் ஒரு போட்டோவும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை டிவிட்டரில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.அவர் வெள்ளச் சேதத்தை பார்வையிடச் சென்றாரா அல்லது அவர் வெள்ளச் சேதத்தில் இருந்து தப்பித்துச் சென்றாரா எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் முதல்வர் அடுத்து வரவுள்ள 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களைத் தயார் செய்கிறார் எனவும்,இதுபோன்ற ஒரு நிகழ்வு இந்தியாவில் மட்டும்தான் நடக்கும், ஏனெனில் இங்குதான் அமைச்சர்களும் முதல்வர்களும் அசாத்திய அதிகாரம் கொண்டவர்கள் எனவும் கிண்டலடித்துள்ளனர்.

ஆனால் இது குறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர்,முதல்வர் வெள்ளம் பாதித்தப் பகுதியில் நடக்கும்போது ஏதோ ஒரு பொருள் கால்மீது மோதியுள்ளது.இதனால் அவரால் நடக்க முடியவில்லை. ஆனாலும் அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டே ஆகவேண்டும் என்பதால் அவரது காவலர்கள் அவரைத் தூக்கிச்சென்றனர்.

அதற்கு முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை ஆனாலும் அவரது பாதுகாப்பு கருதி அவரை அவர்கள் தூக்கிச்சென்றனர் எனக் கூறினார்.ஆனாலும் அவரது இந்த கை மீது அமர்ந்து செய்த பயணம் இன்னமும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க