• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதலமைச்சர் அஞ்சலி

August 17, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் உடலுக்கு தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்,அமைச்சர் ஜெயக்குமார்,மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

“50 ஆண்டுக் காலம் இரு அவைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய தலைவர் வாஜ்பாய். சிறந்த பேச்சாளர்,இலக்கியவாதி,நிர்வாகத்திறன் மிக்கவர் அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு” என்றார்.

மேலும் படிக்க