• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல்தலைவர் நேரில் அஞ்சலி

August 17, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் என வாஜ்பாய் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்,டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க