August 17, 2018
தண்டோரா குழு
கேரளா,கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி,கோவை,திண்டுக்கல்,தேனி,நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,தமிழகம்,புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,சென்னையில் இரவில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
மேலும்,இதன் காரணமாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.வடமேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதே இந்த மழைக்கு காரணம்.