• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாஜ்பாய் இழப்பை தெரிவிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்– அத்வானி

August 16, 2018 தண்டோரா குழு

ஆர்எஸ்எஸ்-ல் தொடங்கி ஜனசங்கம் உருவானது வரை எங்களது பயணத்தை மறக்க முடியாது என வாஜ்பாய் மறைவுக்குபாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதற்கிடையில் வந்தார். வாஜ்பாயின் உடல் நிலை நேற்று மோசமடைந்தது. இந்நிலையில், இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாஜ்பாய் மறைவு கருத்து பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான அத்வானி கூறுகையில்,

தலைமை பண்பு, பேச்சாற்றல், தேசபக்தி, மனித நேயத்தால் மாற்று சித்தாந்தவாதிகளையும் ஈர்த்தவர்; கட்சியின் மூத்த தலைவராக என்னை ஊக்கப்படுத்தி, வழிநடத்தி வந்தவர் வாஜ்பாய்.மூத்தவர் என்பதை விட 65 ஆண்டுகளுக்கு மேலாக என் உற்ற தோழனாக தோள் கொடுத்தவர்: ஆர்எஸ்எஸ்-ல் தொடங்கி ஜனசங்கம் உருவானது வரை எங்களது பயணத்தை மறக்க முடியாது:இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக விளங்கிய வாஜ்பாய் இழப்பை தெரிவிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க