August 16, 2018
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் நாளை காலை டெல்லி செல்கின்றனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்,இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை காலை டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.