• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது – ராஜ்நாத் சிங்

August 16, 2018 தண்டோரா குழு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு,சிறுநீரக தொற்று நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு சென்று,வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.பின்னர் பேசிய அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும்,மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க