August 16, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தொடர்ந்து வரும் கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா மக்களுக்கு பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் கோவையை அடுத்த ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி சார்பில் கேரளா மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.
இதில் பொதுமக்களுக்கு தேவையான,பிரட்,பால் பவுடர்,அரிசி,பருப்பு உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கோவையில் இருந்து கேரளாவிற்கு எடுத்து செல்லப்பட்டது.இதனை அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இணைந்து இந்த உதவும் பணியை செய்து உள்ளனர்.
மேலும் பள்ளி மாணவர்களும் ஆர்வமுடன்,பொருட்களை சேகரித்து,பார்சல் செய்து அனுப்பி வைத்தனர்.தன்னார்வலர்களை கொண்டு இந்த பொருட்கள் கேரளா பொதுமக்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.