• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா கனமழை கொச்சி விமான நிலையம் மூடல்

August 16, 2018 தண்டோரா குழு

கேரளாவில் கனமழை நீடிப்பதால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்,கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே மழைநீர் மற்றும் பெரியார் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கொச்சி விமான நிலையத்தில் புகுந்துள்ளதால் விமான நிலையம் முழுவதும் செயல்பட முடியாத அளவிற்கு முடங்கியுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,கொச்சிக்கு வரும் பயணிகள் விமானத்தை மும்பைக்கு பதில் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டுக்கு திருப்பிவிடும்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க