• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

August 15, 2018 தண்டோரா குழு

ஆகஸ்ட் 9 முதல் தற்போது வரை கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 67 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 9 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் பாதிக்கபட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 30-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. இதனால் அணைகளை ஒட்டி இருந்த கிராமங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால், கிட்டத்தட்ட 60 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் உள்ள மொத்தம் 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. பேரிட மீட்புக்குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று மலப்புரத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அதைபோல் கோழிக்கோடு, கொல்லம், பத்தினம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தனர். கேரளாவில், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 1.5 லட்சம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கேரளாவில் மீட்பு பணிக்காக மத்திய அரசு கூடுதலாக ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க