• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

August 15, 2018 தண்டோரா குழு

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி,கோவை,தேனி,தி்ண்டுக்கல்,நெல்லை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்.தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 35 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்தமான்,வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதே இந்த மழைக்கு காரணம்.

மேலும் படிக்க