August 15, 2018
தண்டோரா குழு
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி,கோவை,தேனி,தி்ண்டுக்கல்,நெல்லை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்.தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 35 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்தமான்,வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதே இந்த மழைக்கு காரணம்.