• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை தலைவர் விட்டுச்சென்றுள்ளார் – துரைமுருகன்

August 14, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில்,இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன்,செயல் தலைவர் ஸ்டாலின்,துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் உட்பட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன்,

“அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடல்,சண்டை,மன வருத்தம் என எதுவும் இல்லாமல் கருணாநிதியுடன் இருந்தேன்.உறங்கும் நேரம் தவிர,மற்ற நேரம் அனைத்து நேரமும் அவருடன் இருக்கும் வாய்ப்பை பெற்றேன்.அறுவை சிகிச்சை மேற்கொண்ட எனக்கு இரண்டாவது முறையாக உயிர் கொடுத்தவர்.சுயமரியாதையை இழக்க கூடாது என அடிக்கடி கூறுவார்.திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை திமுக தலைவர் கருணாநிதி நமக்கு விட்டுச்சென்றுள்ளார். பெரியார்,அண்ணா,கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க.ஸ்டாலின்.இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை”. என்று பேசினார்

மேலும் படிக்க