• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதி பயன்படுத்திய பேனாவை நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் காட்சிக்கு வைக்க வேண்டும்– விஷால்

August 13, 2018 தண்டோரா குழு

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை காட்சிக்கு வைக்க வேண்டும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.காமராஜர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு திரையுலகினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளாரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் பேசுகையில்,

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் நாசர், ராதாரவி, பொன்வண்ணன் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க