• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா வெள்ளப் பாதிப்பு: நடிகர்கள் மம்மூட்டி,துல்கர் சல்மான் நிதியுதவி

August 13, 2018 தண்டோரா குழு

கேரள வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

கேரளாவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.கனமழை காரணமாக இதுவரை 8,316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.

பாலக்காடு,மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர்.50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள அரசுக்கு பலர் இதுவரை நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில்,முதல்வர் நிவாரண நிதிக்காக மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் சேர்ந்து 25 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க