• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் அடைக்கபட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி

August 13, 2018 தண்டோரா குழு

6 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்த புகாரில்,அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளராக இருந்த சின்னசாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் 2011 முதல் 2016 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சின்னசாமி.இவர் அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளராக இருந்தார்.இதற்கிடையில், சின்னசாமி கடந்த பிப்ரவரியில் அண்ணா தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில்,அண்ணா தொழிற்சங்கத்தின் தற்போதைய செயலாளர் ஜக்கையன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில்,சின்னசாமி 6 கோடி ரூபாய் அளவுக்கு கையாடல் செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சின்னசாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவணமோசடி தடுப்பு போலீசார்,சின்னசாமியை நேற்று கோவையில் கைது செய்தனர்.

இதையடுத்து,அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.இதனைத்தொடர்ந்து அவரை 27ஆம் தேதி வரை காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க