• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கருணாநிதிக்கு அஞ்சலி

August 13, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின்,மறைவிற்கு கோவையை சேர்ந்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வரும்,திமுகவின் தலைவருமான கருணாநிதி,கடந்த 7ம் தேதி,உடல்நலக் குறைவால் காலமானார்.இதனையடுத்து சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்,முக்கிய பிரபலங்கள்,திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கோவையை அடுத்த ராஜவீதி பகுதியில்,அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும்,மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், சிஐடியு,எல்பிஎப்,தேமுதிக, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க