• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் – மோடி

August 11, 2018 தண்டோரா குழு

இந்தியாவை பல வகையிலும் மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.மும்பை ஐஐடியின் 56 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,

“நாட்டைக் கட்டமைப்பதில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.உலகளவில் இந்தியா பிரபலமடைய ஐஐடிக்கள் உதவியுள்ளது.உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மனிதசக்தியாக இந்தியா உருவாக ஐஐடி கல்வி நிறுவனங்கள் பங்காற்றியுள்ளது.

இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஐஐடி மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர்.புதிய யோசனைகள் கல்லூரி வளாகங்களில் இருந்தே வெளிவருகிறது.அரசு அலுவலகங்களில் இருந்தோ, கண்கவர் கட்டடங்களில் இருந்தோ அல்ல.இந்தியாவை பல வகையிலும் மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும்.பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கான அவசியம் இருக்கிறது.

மாற்று எரிசக்தி,தூய்மையான தண்ணீர்,உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுத்து ஊட்டச்சத்து குறைப்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை இளைஞர்கள் நிகழ்த்த வேண்டும்.

புதுமை என்பது இன்றைய உலகத்தின் குறியீட்டுச் சொல்லாக உருவெடுத்திருக்கிறது.புதுமைகளைக் கண்டுபிடிக்காத சமூகம் தேக்கநிலையை அடைந்து விடும்.புதுமையான தொழில்களைத் தொடங்குவதற்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது.அதன் மூலம்,புதிய கண்டுபிடிப்புகளின் மீது கொண்டுள்ள தாகம் வெளிப்படுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளும்,புதுமையான தொழில்களைத் தொடங்க வழிவகுப்பதும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை கட்டமைப்பாகும்”. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஐஐடி கல்வி நிறுவன வளாகத்தில் எரிசக்தி அறிவியல்,பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும்,மும்பை ஐஐடிக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் உறுதியளித்தார்.

மேலும் படிக்க