• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி – பினராயி விஜயன்

August 11, 2018 தண்டோரா குழு

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரளா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

கேரளாவின்இடுக்கி,கோழிக்கோடு,வயநாடு,மலப்புரம்,கோழிக்கோடு,கொல்லம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்தது.

இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக சென்று இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும்,வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விளைநிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க