• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி – பினராயி விஜயன்

August 11, 2018 தண்டோரா குழு

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரளா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

கேரளாவின்இடுக்கி,கோழிக்கோடு,வயநாடு,மலப்புரம்,கோழிக்கோடு,கொல்லம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்தது.

இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக சென்று இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும்,வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விளைநிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க