August 11, 2018
தண்டோரா குழு
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும்,அவரை விடுதலை செய்யக்கோரியும் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருமுருகன் காந்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறி நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மேலும்,முறையான காரணமின்றி திருமுருகன் காந்தியை கைது செய்தது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும்,அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.