August 11, 2018
தண்டோரா குழு
கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல நான்காவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக மற்றும் கேரளா மாநிலத்தில் கடந்த 1 மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.மேலும்,தென்மேற்கு பருவமழை காரணமாகவும் சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகம் காணப்படுகிறது.இதனால் சிறுவாணி அணையானது நிரம்பி வழிந்து வருவதனால் கோவை குற்றாலத்தில் நீர் வீழ்ச்சி அதிகமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று நான்காவது நாளாக கோவை குற்றலாத்தில் சுற்றலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும்,மழை குறைந்ததும் சுற்றலா பயணிகள் செல்ல அறிவுறுத்தப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.