• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர் மழைக்காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

August 11, 2018 தண்டோரா குழு

கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல நான்காவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக மற்றும் கேரளா மாநிலத்தில் கடந்த 1 மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.மேலும்,தென்மேற்கு பருவமழை காரணமாகவும் சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகம் காணப்படுகிறது.இதனால் சிறுவாணி அணையானது நிரம்பி வழிந்து வருவதனால் கோவை குற்றாலத்தில் நீர் வீழ்ச்சி அதிகமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக இன்று நான்காவது நாளாக கோவை குற்றலாத்தில் சுற்றலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும்,மழை குறைந்ததும் சுற்றலா பயணிகள் செல்ல அறிவுறுத்தப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க