• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிமன்றம் விடுவித்த பிறகும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீண்டும் கைது!

August 10, 2018 தண்டோரா குழு

சைதாபேட்டை நீதிமன்றம் விடுவித்த பிறகும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீண்டும் கைதுசெய்யபட்டுள்ளார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று காலை ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கியதும் போலீசார் அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் மூலம் திருமுருகன் காந்தி இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, இவ்வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ்,திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தால் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட முடியாது. வேண்டுமானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்கலாம் என நீதிபதி பிரகாஷ் கூறினார். இதையடுத்து, இன்று மாலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்,திருமுருகன் காந்தி தேச விரோதமாக ஒன்றும் பேசவில்லை எனக் கூறி நீதிமன்ற காவலுக்கு அவரை அனுப்ப மறுத்து விடுவித்தது. இதற்கிடையில் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது வாரண்ட் இல்லாமல் கைது செய்வது சட்டவிரோதமானது என்றும், அதனால் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் திருமுருகன் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். திருமுருகன் காந்தி 2017-ல் அரசு எதிராக பேசியதாக அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க