• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி

August 10, 2018 தண்டோரா குழு

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில்,ஆகஸ்ட் 8ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து 3வது நாளாக இன்றும் காலை முதல் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற நடிகர் கார்த்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசினார்.பின்னர் மெரினாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற நடிகர் கார்த்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க