August 10, 2018
தண்டோரா குழு
கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப அரங்கில்ரோட்டரி சங்கம் சார்பில் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும்,இனி வரும் எதிர்கால வாழ்க்கையில் மாணவ மாணவிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும் எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு பாட திட்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது.சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகுமார் வாரியர் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
“அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அதிகாலை எழுந்து யோகா மற்றும் தியானம் செய்யவதன் மூலம் மன அழுத்தம் மன உளைச்சல் தவிற்பதோடு வரும் கால கட்டங்களில் என்னவாக வேண்டும் என்பதை உருவகப்படுத்தும் என்றார்.
மேலும்,இதனால் ஏற்படும் நன்மைகள் பத்து நாட்களில் இப்பயிற்சிகள் செய்து பார்ப்பதில் தங்களுடயே மாற்றம் தங்களுக்கே நடைபெறும் என்றார்.இதை கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத்தில் நல்ல தலைவனாக உருவாக முடியும்”.என்றுக் கூறினார்.