• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல்?

August 9, 2018 தண்டோரா குழு

முத்தலாக் சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு ஆண், தன் மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது மரபாகும். இது,பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாக கருதப்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், முத்தலாக் முறை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனைத் தொடர்ந்து ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதற்கிடையில், முத்தலாக் மசோதாவில், திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்நிலையில், முத்தலாக் மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமின் கிடையாது என்ற பிரிவு தொடரும் எனவும், நிதிபதி விரும்பினால் மட்டுமே ஜாமின் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முத்தலாக் சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க