• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி

August 9, 2018

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து இன்று காலை பாலூற்றி அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் கடந்த 7ம் தேதி மாலை காலமானார்.

இதையடுத்து அவரது உடல் ,அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.அவருடைய நினைவிடத்தில் பொது மக்களும்,கட்சி தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது மகன்களுடன் வந்தார்.பின்னர் கருணாநிதியின் நினைவிடத்தில் பாலூற்றி மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.இதனைத்தொடர்ந்து அவரது மகன்களும் கருணாநிதிக்கு பாலூற்றி மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க