• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா அருகில் தம்பி…மெரினாவில் மறைந்தது சூரியன்

August 8, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 11 நாட்களாக, உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஆக.7) மாலை 6.10 மணிக்கு காலமானார்.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின் சிஐடி காலனி வீட்டிற்கும் கொண்டு செல்லப்பட்டு பின்னர், அதிகாலை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதி உடல் ஏற்றப்பட்டது.அங்கிருந்து, மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கியது. செல்லும் வழியெங்கும் தொண்டர்களின் விண்ணை முழக்கும் சப்தத்துடன் கலைஞரின் உடல் சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, மாலை 6.15 மணிக்கு மெரினா வந்தடைந்தது.

அங்கு, முப்படை வீரர்கள் கருணாநிதி உடலை எடுத்து வந்து இறுதி மரியாதை செய்தனர். தேசியக்கொடியை ஸ்டாலினிடம் வீரர்கள் கொடுத்தனர். இதனையடுத்து, குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முப்படை வீரர்களும் கலைஞரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்,இதன்பின்னர் அவரின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது கூடி இருந்த தொண்டர்கள் வாழ்க வாழ்க டாக்டர் கலைஞர் என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர்.

திமுக தலைவர் கலைஞர் இறந்து 16 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க