• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது – ராகுல் காந்தி

August 7, 2018 தண்டோரா குழு

இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது என கருணாநிதி மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கருணாநிதியின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட கலைஞர் தமிழக அரசியல் களத்தை கடந்த 60 ஆண்டுகளாக சூப்பர் ஹீரோ போல ஆக்கிரமித்திருந்தார்.அவரது மறைவு மூலம் இந்தியா தனது சிறந்த மகனை இழந்தது.அவரது மறைவால் வாடும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க