• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார் – விடுதி காப்பாளர் புனிதா

August 4, 2018 தண்டோரா குழு

கோவை விடுதி உரிமையாளர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட , விடுதி காப்பாளர் புனிதா உடந்தயாக செயல்பட்டதாக விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தர்ஷணா பெண்கள் விடுதியில் , தங்கி உள்ள பெண்களை அவ்விடுதி காப்பாளர் புனிதா தவறாக வழி நடத்துவதாகவும், விடுதி உரிமையாளர் ஜகநாதன் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட புனிதா உடந்தையாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் 3 தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இதில் விடுதி உரிமையாளர் ஜகநாதன், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். ஜகநாதன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், விடுதி காப்பாளரை காவல்துறையினர் தேடி வந்த சமயத்தில் இம் மாதம் 1 ஆம் தேதி கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில் நேற்று புனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்த மனுவில், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்றே விசாரணை முடிவடைந்த நிலையில் காவல்துறையினர் புனிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதில் புனிதா சென்னையில் தலைமறைவாக இருந்ததாகவும், விடுதி உரிமையாளர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட புனிதா உடந்தையாக செயல்பட்டதாகவும் காவல்துறையினர் விசாரணையில் ஒப்புக்கொண்டாதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் பணத்திற்காக புனிதா மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து,நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட புனிதாவை வருகின்ற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புனிதா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க