• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு

August 4, 2018 தண்டோரா குழு

கோவை நீலம்பூர் புறவழிச்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை சேரன்நகர் பகுதியை சேர்ந்த சிதம்பரநாத்,கௌதம், கோகுல்நாத் ஆகியோர் நண்பர்கள் சிலருடன் கிரிகெட் விளையாண்டு விட்டு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். கார் நீலம்பூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டு இருந்த போது முன்னாள் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது நிலைதடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து நிலையில் எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த கல்லூரி மாணவன் கௌதம், சித்ம்பரநாத், கோபிநாத் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வினித், சுபிஜித் தேவ், விக்னேஷ்வர்,மோகித், சூர்யா, சல்மான் பாரிஸ் மற்றும் அடையாளம் தெரியாத நபர் என 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.காயம் அடைந்த 7 பேர் கோவை புறவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதி விரைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க