• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலம் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

August 4, 2018

கோவையில் மழையின் காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றலாம்,இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவை குற்றாலம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.

கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கோவை குற்றாலம் பகுதிகளில்,கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குற்றாலம் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும்,பலத்த காற்று வீசி வருவதால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு,தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.

தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால்,சராசரி அளவுக்கு தண்ணீர் வருவதன் காரணமாக இன்று முதல் கோவை குற்றலாத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க