• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

August 2, 2018 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரத்தில் நேற்று நடந்த கோர விபத்தை தொடர்ந்து இன்று போக்குவரத்து காவல் துறையினர் அந்த வழியில் வேகமாக வரும் வாகனங்களை, கட்டுப்படுத்த சாலை தடுப்பு வைத்தும், வேக கட்டுப்பாட்டு கருவி பயன்படுத்தியும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியில் நேற்று தாறுமாறாக வந்த ஆடி கார்,சாலையில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குகாரை ஓட்டி வந்த ஓட்டுனர் குடிபோதையில் வந்ததாகவும், அதி வேகமாக வந்ததுமே காரணமாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று போக்குவரத்து காவல் துறையினர் அப்பகுதியில் வேகத்தடுப்புகளை அமைத்து வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் வேக கட்டுப்பாட்டு கருவி மூலமாகவும் வாகனங்கள் வருவதை கண்காணித்து வருகின்றனர். அதைபோல் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கவும் , வாகன ஒட்டிகளிடம் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க