• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

August 2, 2018 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரத்தில் நேற்று நடந்த கோர விபத்தை தொடர்ந்து இன்று போக்குவரத்து காவல் துறையினர் அந்த வழியில் வேகமாக வரும் வாகனங்களை, கட்டுப்படுத்த சாலை தடுப்பு வைத்தும், வேக கட்டுப்பாட்டு கருவி பயன்படுத்தியும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியில் நேற்று தாறுமாறாக வந்த ஆடி கார்,சாலையில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குகாரை ஓட்டி வந்த ஓட்டுனர் குடிபோதையில் வந்ததாகவும், அதி வேகமாக வந்ததுமே காரணமாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று போக்குவரத்து காவல் துறையினர் அப்பகுதியில் வேகத்தடுப்புகளை அமைத்து வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் வேக கட்டுப்பாட்டு கருவி மூலமாகவும் வாகனங்கள் வருவதை கண்காணித்து வருகின்றனர். அதைபோல் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கவும் , வாகன ஒட்டிகளிடம் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க