கோவையில் நடந்த கார் விபத்தில்உயிரிழந்தோரின்குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சுந்தராபுரத்தில் பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கார் ஓட்டுநர் கைது செய்யபட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த முதலமைச்சர் பழனிச்சாமிஉயிரிழந்தோரின்குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காணமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு