July 30, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதையடுத்து,இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய pirapalangaluபிரபலங்களும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் எம்.பி. ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு வந்த அவர்கள் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தனர். அப்போது, இலங்கை அதிபர் சிறிசேனாவின் கடிதம் ஒன்றையும் ஸ்டாலினிடம் கொடுத்தனர்.
அதில் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதாக சிறிசேனா தெரிவித்துள்ளார்.