July 28, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசின் சார்பாக மருத்துவ உதவிகள் கேட்டால் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நள்ளிரவில் மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது.தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில்,சேலத்தில் செய்தியாளர்களை சந்ததித்த முதல்வர் பழனிசாமி,
“திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்.கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஐந்து முறை முதல்வராக இருந்தவர்,தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார்.அரசின் சார்பாக மருத்துவ உதவிகள் கேட்டால் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம்”.இவ்வாறு கூறினார்.