• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருவாட்டு ரசம் செய்ய…!

July 26, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கருவாடு – 4 துண்டுகள்
புளி – எலுமிச்சை அளவு
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 4
தக்காளி – 2 பெரியது
வெங்காயம் – 1 பெரியது
கொத்தமல்லி – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – 2 கீற்று
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – சிறு துண்டு

செய்முறை:

கருவாட்டை சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.மிக்ஸியில் இஞ்சி,பச்சை மிளகாய், சீரகம்,மிளகு,பூண்டு,இஞ்சி,ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.அதனுடன் தக்காளி சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு,காய்ந்த மிளகாய்,அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள்,உப்பு சேர்க்க வேண்டும்.மீதமுள்ள ஒரு தக்காளி, வெக்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி போடவும்.பிறகு மிளகாய் தூள்,தனியா தூள் முதலியவற்றை சேர்த்து நன்கு 2 நிமிடங்கள் வதக்கி பின்னர் புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமகவே சேர்க்க வேண்டும்.

பிறகு சுத்தம் செய்த கருவாட்டு துண்டுகளை பாதி பாதியாக நறுக்கி போடலாம் அல்லது சிறிது எண்ணெய் விட்டு சற்று வதக்கியும் அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து கருவாடு வெந்து வாசனை வரும்போது கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான சூப்பரான கருவாட்டு ரசம் தயார்.

மேலும் படிக்க