• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவைப் பார்த்து வியப்பதற்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு வெறுக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது – நடிகர் ராஜேஷ்

July 26, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவைப் பார்த்து நாம் வியப்பதற்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு வெறுக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது என நடிகர் ராஜேஷ் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் பிரபல தொழிலதிபரும்,கோவை நன்னெறிக் கழகத்தின் தலைவருமான இயகோகா சுப்பிரமணியம் எழுதிய ‘நிறம் மாற்றும் மண்’நூலின் வெளியீட்டுவிழா நடைபெற்றது.சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் நூலை வெளியிட மூத்த வழக்கறிஞர் என்.வி.நாகசுப்ரமணியம் நூலைப் பெற்றுக்கொண்டார்.

நாஞ்சில் நாடன் தலைமை உரையில் ‘எங்கு சென்றோம்,என்ன பார்த்தோம்,என்ன உண்டோம் என்று பலரும் பயணக்கட்டுரைகள் எழுதுகிறார்கள்.அது வெறும் சுற்றுலா அனுபவமே.பயணத்தின் போது ஒருவருக்கு உண்டாகக்கூடிய பார்வை,இன்னொரு பண்பாட்டினை ஊடறுத்துப் பார்க்கும் நுண்ணிய நோக்குடையவர்களால் எழுதப்படும் பயணக்கட்டுரைகளுக்கே மதிப்புண்டு.

இயகோகா சுப்பிரமணியம் தனது அமெரிக்க மற்றும் கனடா தேசங்களில் ஏற்பட்ட பயண அனுபவங்களை மிக துணிச்சலாக வெளிப்படையாக சுவாரஸ்யமான நடையில் எழுதியுள்ளார் என்றார்.

இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய நடிகர் ராஜேஷ்,

தமிழர்களின் வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.அமெரிக்கர்களுடையது இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறை.அமெரிக்காவைப் பார்த்து நாம் வியப்பதற்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு வெறுக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது.நூலாசிரியர் இயகோகா சுப்பிரமணியத்திற்கு நல்ல ரசனை இருக்கிறது.பக்கச் சாய்வின்றி இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கு இடையே உள்ள ஏற்றதாழ்வுகளை அலசுகிறார்.அவரது தேசப்பற்றும்,பண்பாட்டுப் பற்றும், தாய்ப்பாசமும் நூலின் கட்டுரைகளில் மிளிர்கின்றன என்றார்.

மேலும்,இவ்விழாவில் நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா பதிப்பாளர் உரையாற்றினார்.திருப்பூர் வைகிங் குழுமத்தலைவர் ஏ.சி.ஈஸ்வரன்,கோவை புத்தகத் திருவிழா தலைவர் எஸ்.செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்கள்.

மேலும் படிக்க