• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து ஆடியோ வெளியீடு

July 26, 2018 தண்டோரா குழு

கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆடியோவை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா வெளியிட்டார்.

கோவையை சேர்ந்த சேகர் என்பவர்,இந்த ஆடியோவிற்கான பாடல் வரிகள் எழுதி பாடியுள்ளார். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்க்க வேண்டும்,வேகமாக வாகனத்தை இயக்கக்கூடாது,குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய வரிகள் கொண்ட இந்த ஆடியோ 5நிமிட 23 நொடிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு சாலை பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடியோவை,கல்லூரி,பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. மேலும்,இந்த ஆடியோவை கொண்டு வீடியோவும் தயாராகி வருகிறது.சாலை விபத்துகளை தடுக்க மாநகர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க