• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

July 26, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் உள்ள,எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று துவங்கியது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள,எம்.சி.ஏ படிப்புகளில் டான்செட் மதிப்புகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.அதன்படி இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று எம்.சி.ஏ படிப்புகளுக்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் துவங்கியது.எம்.சி.ஏ கலந்தாய்விற்காக மொத்தம் 1552 பேர் அழைக்கபட்டு உள்ளனர்.வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் இன்று மட்டும் 666 மாணவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து,எம்.பி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற 29ம் தேதி முதல்,ஆகஸ்ட் நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது.மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க