• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

July 26, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் உள்ள,எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று துவங்கியது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள,எம்.சி.ஏ படிப்புகளில் டான்செட் மதிப்புகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.அதன்படி இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று எம்.சி.ஏ படிப்புகளுக்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் துவங்கியது.எம்.சி.ஏ கலந்தாய்விற்காக மொத்தம் 1552 பேர் அழைக்கபட்டு உள்ளனர்.வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் இன்று மட்டும் 666 மாணவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து,எம்.பி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற 29ம் தேதி முதல்,ஆகஸ்ட் நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது.மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க