• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

58வது காவல்துறை விளையாட்டு போட்டி தொடர் ஜோதி கோவை வந்தது

July 25, 2018 தண்டோரா குழு

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறைக்கான 58 ஆவது விளையாட்டுப் போட்டி வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது.இதனையடுத்து இந்த விளையாட்டு போட்டி தொடங்கும் விதமாக தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஜோதி கடந்த 24ம் தேதி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு இன்று கோவை மேற்கு மண்டலம் வந்தடைந்தது.இந்த ஜோதியை மேற்கு மண்டல தலைவர் பாரி பெற்றுக் கொண்டார்.பின்னர் மேற்கு மண்டலத்தைச் சார்ந்த காவல்துறை விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட தொடர் ஜோதி ஓட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள காவல்துறை மேற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் காவல்துறை மேற்கு மண்டல தலைவர் பாரி கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பெரியய்யா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.இந்த ஓட்டம் கோவை வ.ஊ.சி மைதானம் வரை சென்று,பின்னர் இந்த ஜோதி இங்கிருந்து புறப்பட்டு மதுரை வழியாக வரும் 27ஆம் தேதி திருச்சி சென்றடையவுள்ளது.பின்னர் அங்கு அந்த ஜோதி ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம் ஆகின்றன.

மேலும் படிக்க