• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

58வது காவல்துறை விளையாட்டு போட்டி தொடர் ஜோதி கோவை வந்தது

July 25, 2018 தண்டோரா குழு

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறைக்கான 58 ஆவது விளையாட்டுப் போட்டி வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது.இதனையடுத்து இந்த விளையாட்டு போட்டி தொடங்கும் விதமாக தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஜோதி கடந்த 24ம் தேதி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு இன்று கோவை மேற்கு மண்டலம் வந்தடைந்தது.இந்த ஜோதியை மேற்கு மண்டல தலைவர் பாரி பெற்றுக் கொண்டார்.பின்னர் மேற்கு மண்டலத்தைச் சார்ந்த காவல்துறை விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட தொடர் ஜோதி ஓட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள காவல்துறை மேற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் காவல்துறை மேற்கு மண்டல தலைவர் பாரி கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பெரியய்யா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.இந்த ஓட்டம் கோவை வ.ஊ.சி மைதானம் வரை சென்று,பின்னர் இந்த ஜோதி இங்கிருந்து புறப்பட்டு மதுரை வழியாக வரும் 27ஆம் தேதி திருச்சி சென்றடையவுள்ளது.பின்னர் அங்கு அந்த ஜோதி ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம் ஆகின்றன.

மேலும் படிக்க