• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீகாரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவை விமானப்படை ஊழியர் கைது

July 24, 2018 தண்டோரா குழு

பீகாரில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவை சூலூர் விமானப்படையில் பணிபுரியும் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீஹார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்தவர் பப்புகுமார். கோவை சூலூர் விமானப்படையில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவர் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும்,திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பப்புகுமாரை கைது செய்ய பிடிவாரண்டுடன் பாட்னா அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்வதி குமாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோவை வந்தனர்.

சூலூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் பப்புகுமாரை கைது செய்த பாட்னா போலீசார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பப்புகுமாரை ஆஜர்ப்படுத்தினர்.இதனையடுத்து பப்புகுமாரை பீகார் அழைத்துச் செல்ல நீதிபதி நாகராஜன் அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை ரயில் மூலம் பீகார் அழைத்துசென்றனர்.வரும் 27ம் தேதி பீகாரில் நீதிமன்றத்தில் பப்புகுமாரை ஆஜர்படுத்த உள்ளனர்.

மேலும் படிக்க