• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லாரிகள் வேலை நிறுத்தம்:300 டன் எடையிலான காய்கறிகள் தேக்கம்

July 24, 2018 தண்டோரா குழு

கோவையிலிருந்து மினி லாரி மற்றும் ஆட்டோக்கள் மூலம் காய்கறிகள் கொண்டு செல்லப்படுவதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் நான்கரை லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் பலகோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கோவைக்கும் கோவையிலிருந்து பிற மாநிலங்களுக்கும் சுமார் 300 க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நேற்று வரை ஒருசில காய்கறி லாரிகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முழுவதுமாக லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கோவை எம்.ஜி.ஆர்.காய்கறி மொத்த சந்தையிலிருந்து மினி லாரி,சரக்கு ஆட்டோக்கள் மற்றும் பிக் அப் வாகனங்கள் மூலம் காய்கறிகள் கொண்டு செல்லப்படுவதனால் சுமார் 300 டன் எடையிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் சிறிய வாகனங்களில் காய்கறிகள் ஏற்றி விடப்படுவதால் அதிக வாடகை மற்றும் ஆட்கள் கூலி ஆகியவற்றின் காரணமாக தக்காளி,வெங்காயம்,பூண்டு,மற்றும் பல்வேறு காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதே நிலை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் நிலையில் இந்த விலை உயர்வு இரு மடங்காகும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.எனவே லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அர்சுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க