• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆர்பாட்டம்

July 24, 2018 தண்டோரா குழு

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 7 மாதங்களாக செயல்படாமல் உள்ளது.இத்திட்டதிற்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பணத்தை தமிழக அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கட்டிடம் கட்ட சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்ததை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.வேலை கேட்டு அளிக்கும் மனுவிற்கு ஒப்புதல் ரசீது வழங்குவதோடு 15 நாட்களுக்குள் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டிடக் கூலியை 224 ரூபாய் குறைக்காமல் வழங்கவும்,வேலையில்லா நாட்களில் நிவாரணத்தொகை வழங்குதல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர்,கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமுல்படுத்தக்கோரி மத்திய,மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க