• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

4 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து

July 24, 2018 தண்டோரா குழு

திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில், இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேல்பாலானந்தலைச் சேர்ந்த மணிகண்டன், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் யூகேஜி பயின்று வந்த மகளை பள்ளியிலிருந்து கடத்தி, கிணற்றில் வீசி கொன்றதாக 2013-ஆம் ஆண்டு கைதானார். இவ்வழக்கைவிசாரித்த திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்றம், மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதையடுத்து,தண்டனையை ரத்து செய்ய கோரி மணிகண்டன் சார்பிலும் தண்டனையை உறுதி செய்யுமாறு மகளிர் நீதிமன்றம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.விமலா, ரமாதிலகம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, மணிகண்டனின் தூக்கு தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும்,நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் படிக்க