• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராகுல் காந்தியை கண்ணடிப்போர் சங்கத்துக்கு வரவேற்கிறேன் -பிரியா வாரியர்

July 21, 2018 தண்டோரா குழு

ஒற்றைக்கண் அசைவில் புகழ் பெற்ற நடிகை பிரியா வாரியர்,கண்ணடிப்போர் சங்கத்துக்கு புதிய உறுப்பினராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்றுள்ளார்.

நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடல் ஒன்றில் புருவத்தை உயர்த்திக் கண்ணடித்து பலரையும் கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒரே நாளில் பெரும் புகழ் பெற்றார்.

இதற்கிடையில்,பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது உரையை முடித்த பின் யாரும் எதிர்பாராத வகையில்,தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று பிரதமர் மோடிக்கு கைகொடுத்து பின் கட்டியணைத்தார்.

பின்னர் தனது இருக்கைக்கு திரும்பி வந்த ராகுல்காந்தி,சக கட்சி உறுப்பினரைப் பார்த்து சிரித்தபடி கண்ணடித்தார்.அவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.இதையடுத்து சிலர் ராகுல் காந்தியின் இந்த காட்சியையும் பிரியா வாரியரின் கண்ணசவையும் ஒப்பிட்டு மீம்ஸ் கிரியேட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை பிரியா வாரியர்,தாம் கல்லூரி முடிந்து வந்ததும்,ராகுல் கண்ணடித்த நிகழ்வை தொலைக்காட்சியில் கண்டதாகவும்,அவரை கண் அடிப்போர் சங்கத்திற்கு வரவேற்பதாகவும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க