• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஏகல் சன்ஸ்தான் கல்வி மையம் ஆரம்பம்

July 18, 2018 தண்டோரா குழு

வட மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஏகல் சன்ஸ்தான் கல்வி மையம் தற்போது கோவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள இந்திய வர்த்தக சபை அரங்கில் ஏகல் வித்தியாலயா சார்பில் கல்வி மையம் தொடக்க விழாவானது நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய ஏகல் அபியான் நிர்வாக குழுவின் தலைவர் எச்.பங்கரா அவர்கள் கூறுகையில்,

“வடமாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஏகல் சன்ஸ்தான் கல்வி மையம் தற்போது கோவையிலும் தொடங்கப்பட்டுள்ளது.இக்கல்வியானது கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டுள்ளது.இதுவரை 22 மாநிலங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுவதாகவும்,நேபாளத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளதாகவும்,தேசிய அளவில் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும்,அரசு உதவி இல்லாமல் அறக்கட்டளை மூலம் இப்பள்ளிகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்”.

மேலும் படிக்க