• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ ரெட்டி மீது விரைவில் வழக்கு தொடர்வோம்– இயக்குநர் சுந்தர்.சி

July 16, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.இதுமட்டுமின்றி இவர் சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள்,இயக்குநர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,ஸ்ரீ ரெட்டி இன்று நடிகரும்,இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால்,இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சுந்தர்.சி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும்,ஸ்ரீ ரெட்டி கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.விரைவில் வழக்கு தொடர்வோம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து,சுந்தர்.சி குறித்து தாம் செய்த பதிவுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப் போவதாக ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் இன்னொரு பதிவையும் போட்டுள்ளார்.

மேலும் படிக்க