• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை – மரங்கள் சாய்ந்தன

July 16, 2018 தண்டோரா குழு

கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் கடுமையான சூறாவளிக்காற்றால்,தேக்கு மரங்கள் அடியோடு சாய்ந்ததால் அதனை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்,கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கோவை குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தேக்கு மரங்கள்,புளிய மரங்கள் அடியோடு
சாய்ந்துள்ளது.இதனால் மரங்கள் ஒவ்வொன்றையும் அறுத்து அதனை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,அப்பகுதியில் இருந்த மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்ததால்,மின் கம்பங்களும் சாய்ந்தன.இதனால் மின் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க