நடிகர் ரஜினிகாந்த்தின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அமைச்சர் செங்கோட்டையன் அரசு சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் கல்வியில் சிறப்பாக உள்ளது என்றும்,அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில்,இன்று சென்னை அண்ணாநகரில் அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“நடிகர் ரஜினிகாந்த்தின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அரசு சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் கல்வித்துறை சார்பாக ஐஏஎஸ் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ. என்கிற பட்டயக் கணக்காளர் கல்வி படிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் 2019 ஆம் ஆண்டு முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி பாடம் கொண்டு வரப்பட உள்ளது.இதன் மூலம் படித்து முடித்தவுடன் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்” என்று கூறினார்.
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு